மலைக்கோவிலூர்- டூவீலரில் சென்ற இளைஞன் சென்டர் மீடியனில் மோதி உயிரிழப்பு.

மலைக்கோவிலூர்- டூவீலரில் சென்ற இளைஞன் சென்டர் மீடியனில் மோதி உயிரிழப்பு.

Update: 2024-10-10 12:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மலைக்கோவிலூர்- டூவீலரில் சென்ற இளைஞன் சென்டர் மீடியனில் மோதி உயிரிழப்பு. ஈரோடு மாவட்டம் அரச்சலூர், வடக்கு நச்சுவலசு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் வயது 22. இவரது உறவினர் விருதுநகர் மாவட்டம், சாத்தூர், கருப்பு காட்டு தெருவை சேர்ந்த முனீஸ்வரன் மனைவி செல்வநாயகி வயது 22 ஆகிய இருவரும் அக்டோபர் 7ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் திண்டுக்கல்- கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். தேவேந்திரன் டூவீலரை ஓட்ட, செல்வநாயகி பின்னால் அமர்ந்து சென்றார். இவர்களது வாகனம் மலைக்கோவிலூர் குடகனாறு பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் செல்லும்போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட தேவேந்திரன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். செல்வநாயகிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தேவேந்திரனின் மனைவி கௌரி வயது 20 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த தேவேந்திரனின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காவல் துறையினர்.

Similar News