கரூரில் மீண்டும் மழை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

கரூரில் மீண்டும் மழை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Update: 2024-10-10 13:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் மீண்டும் மழை பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், கரூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் சற்று முன் கரூர் நகர பகுதிகளில் திடீர் மழை பெய்தது. கடந்த சில நாட்களாவே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மீண்டும் மழை பெய்து உள்ளது. நாளைய தினம் ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிக்கு செல்லும் நிலையில், மழை பெய்ததால் பொதுமக்களுக்களுக்கு பொருட்கள் வாங்குவதிலும், ஆயுத பூஜை விற்பனைக்காக வாங்கி வைத்த பொருள்களை விற்பனை செய்வதில் வியாபாரிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது.

Similar News