ராசிபுரம் அருகே 11 ஊராட்சிகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி உடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை மனு..

ராசிபுரம் அருகே 11 ஊராட்சிகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி உடன் இணைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை மனு...

Update: 2024-10-10 13:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி, சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி,கூனவேலம்பட்டி, குறுக்குபுரம்,உள்ளிட்ட 11 ஊராட்சிகளை,ராசிபுரம் நகராட்சியுடன் 6 ஊராட்சிகள் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூராட்சி உடன் 5 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதனை கண்டித்து ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக,திமுக,பாஜக என 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் ராசிபுரம் நகராட்சி, பேரூராட்சி உடன் இணைக்கும் முடிவை ரத்து செய்யக்கோரி ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி மற்றும் ஒன்றிய தலைவர் ஜெகநாதன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதனை தொடர்ந்து குறுக்குபுறம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் பேசுகையில் ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடன் இணைத்தால் பல்வேறு சலுகைகள் பாதிப்படைவதாகவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய முடியாது, என பல்வேறு கருத்துகளை முன்னிறுத்தி அரசு எடுத்துள்ள முடிவை ரத்து செய்ய வேண்டும் எனவும்,கோரிக்கையை ஏற்காவிட்டால் வருங்காலங்களில் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்...

Similar News