வேலகவுண்டம்பட்டி அருகே பனை மரத்த்தில் தீ வைத்த வழக்கில் ஒருவர் கைது.

வேலகவுண்டம்பட்டி அருகே பனை மரத்த்தில் தீ வைத்த வழக்கில் ஒருவர் கைது தலைமறைவான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-10-17 13:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்திவேலூர்,அக்.17- நாமக்கல் மாவட்டம்,  வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள தளிகை, நரவலூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (61) ஓய்வு பெற்ற ஆசிரியர்.  இவரது நிலத்திற்கு அருகே பெரியகவுண்டம்பாளையம், திண்டமங்கலம் பகுதியை சேர்ந்த திருமுருகன்(41) என்பவரது நிலம் உள்ளது. இதில் ரோடு போடுவதற்காக திருமுருகன் அப்பகுதியில் தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் கணேசன் நிலத்தில் இருந்த பனை மரங்களின் மட்டைகளில் தீ பிடித்ததில் அங்கிருந்த சுமார் 40 பனை மரங்கள் எரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கணேசன் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் பனை மரங்களை எரித்தாக திருமுருகன் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஆகியோர் மீது புகார் செய்தார். புகாரின் பேரில் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பனை மரங்களை எரித்த வழக்கில் துர்க்காவை கைது செய்து தலைமறைவான அவரது கணவர் திருமுருகனை தேடி வருகின்றனர்.

Similar News