சர்வீஸ் சாலையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

சர்வீஸ் சாலையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-10-23 04:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சர்வீஸ் சாலையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் இளைஞர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, வெஞ்சமாங்கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணபவன் மகன் சரபோஜி வயது 25. இவர் அக்டோபர் 19ஆம் தேதி காலை 6:30 மணி அளவில், மதுரை- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரூர் நகரப் பகுதியில் செயல்படும் ஸ்ரீ முருகன் ரெசிடென்சி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் செல்லும்போது, எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், கரிகாலி பகுதியைச் சேர்ந்த மனோகரன் வயது 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், சரபோஜி ஓட்டி சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த சரபோஜிக்கு தலை,முகம், கண்ணம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த சரபோஜியின் தந்தை சரவணன் பவன் வயது 58 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை தவறான வழியில் வேகமாக வந்து மோதி விபத்து ஏற்படுத்திய மனோகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News