அனுமதி இன்றி செயல்பட்ட கல்குவாரிக்கு சீல் திருமயம் அருகே 5 பேர் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-10-23 03:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருமயம் அருகே வெள்ளிப்பட்டி யில் அரசு அனுமதியின்றி கல் குவாரிகள் செயல்படுவதாக மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின்பேரில் தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலை மையிலான போலீசார் நேற்று வெள்ளிப்பட்டியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கல்குவாரி ஒன்று நீண்டகாலமாக அரசு அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு சீல் வைத்தனர். அங்கி ருந்த 2 டிப்பர் லாரிகள், டிராக்டர், 2 பொக்லைன் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வாகன டிரைவர்கள் சுதாகர்(34), செல்வராஜ்(50), குரு (41), மருது(52) பெருமாள்(20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News