ஜேடர்பாளையத்தில் ஜவுளி கடையில் பெண் தூக்கிட்டு தற்கொலை.

பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் வேலை செய்த ஜவுளிக்கடையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை.

Update: 2024-10-24 15:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர்,அக்.25: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கறப்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி( இறந்துவிட்டார் ). இவரது மனைவி சிந்து (30). இவர் சஞ்சனா,விகாஷ் இரண்டு குழந்தைகளுடன் மாமனார் மாமியாவுடன் வசித்து வந்தார். இவர் ஜேடர்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் கடந்த நான்கு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த சிந்து மதியம் சுமார் ஒரு மணி அளவில் ஜவுளிக்கடையில் இருந்தவர்களிடம் கழிப்பறை சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகி வராததைக் கண்டு ஜவுளிக்கடை உரிமையாளர் மணிகண்டன் சென்று பார்த்தபோது கடையின் பின்புறம் உள்ள ஒரு ஓட்டு கொட்டகையில் இருந்த விட்டதில் சேலையால் தூக்கில் தொங்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிந்துவின் உறவினருக்கு தகவல் தெரிவித்து விட்டு சிந்துவின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்து சிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News