அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.

மதுரை திருமங்கலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.;

Update: 2025-02-05 05:06 GMT
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.
  • whatsapp icon
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி நகர் விஏஓ பாலமுருகன் என்பவர் தனது உதவியாளர் மூலம் கிடைத்த தகவலின் படி கல்லுப்பட்டியில் இருந்து கள்ளிக்குடி செல்லும் சாலையில் முத்து டூ வீலர் ஒர்க் ஷாப் அருகே அடையாளம் தெரியாத 50 வயது ஆண் சடலம் இருப்பதாக டி. கல்லுப்பட்டி காவல் நிலையத்திற்கு நேற்று (பிப்.4)புகார் அளித்தார். போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்று டி . கல்லுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News