ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பப் பிரச்சனை காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி மீட்டனா்.;
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மாதவராயன்பட்டியைச் சோ்ந்தவா் இந்திராணி. இவா் தனது கணவா் அழகுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இந்த நிலையில், தனது கணவா் சொத்துகளை அவரது தம்பியின் உறவினா்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டதாகவும், கணவரின் சொத்தில் தனக்கு உள்ள பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திராணி சதுா்வேத மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சொத்துகளை பெற்று கொள்ள அறிவுறுத்தினா். இந்நிலையில், தனது புகாருக்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இந்திராணி மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அப்போது, அங்கு பணியில் இருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினா். விசாரணைக்குப் பின்னா், ஆட்சியரை சந்திக்க இந்திராணியை அழைத்துச் சென்றனா்.