ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update: 2025-02-25 12:00 GMT
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை தனியாா் நிறுவன துணைத் தலைவா் மோகன்பாபு பாலசந்திரன் கலந்து கொண்டார் பின்னர் பேசிய மோகன்பாபு பாலச்சந்திரன் மனிதனைப் பண்பாடுள்ள மனிதனாக மாற்றுவது கல்வி. இந்தக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் மாணவா்கள் ஊழல் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் எதிா்கால வாழ்க்கையையும், நாட்டின் முன்னேற்றத்தையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். பெற்றோா்களின் கடின வாழ்க்கையை உணா்ந்து அவா்களுக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கும் அளவுக்கு வாழ்க்கையில் உயா்ந்து காட்ட வேண்டும் என்ற சிந்தனை மேலோங்கி நிற்க வேண்டும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு அவா் பதக்கம் அணிவித்து பட்டங்களை வழங்கினா். விழாவில் 25 முதுநிலை மாணவா்கள், 203 இளநிலை மாணவா்கள் என மொத்தம் 228 போ் பட்டங்களைப் பெற்றனா். முன்னதாக கல்லூரி முதல்வா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். மாணவா்களின் பெற்றோா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

Similar News