நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய மீன் மீன்பிடி துறைமுகத்தை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு;
நாகை மாவட்டம் நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகம் 34.30 கோடி ரூபாய் செலவில் படகு இறங்குதளம், படகு அணையும் சுவர். தெற்கு மற்றும் வடக்கு பக்க அலை தடுப்புச் சுவர்கள். முகத்துவாராம் ஆழப்படுத்துதல், தடுப்புச் சுவர் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிற கடந்த 2023 -ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், நம்பியார் நகர் சிறிய மீன்பிடித் துறைமுகத்தில் 700 மீட்டர் கடல் அரிமானம் ஏற்பட்டுள்ளதை தடுப்பதற்காக, கூடுதலாக 4 நேர்கல் சுவர் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு, தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. நம்பியார் நகர் சிறிய மீன்பிடி துறைமுகத்தில், மீனவப் பெருமக்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மீனவர்கள், முதலமைச்சர் அவர்களிடம், சுனாமி குடியிருப்புகளை சீர்செய்து தர வேண்டும. வங்கி கடனுதவிகளை தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அப்போது, முதலமைச்சர், மீனவர்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர், நம்பியார் நகரிலுள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி சிறுவர். சிறுமிகள் அளித்த உற்சாக வரவேற்பினை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு, அச்சிறுவர், சிறுமியர்களுடன் உரையாடினார். நிகழ்ச்சியின் போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்எல்ஏ முகமது ஷாநவாஸ். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் உ.மதிவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.