கன்னியாகுமரி அருகே மறக்குடி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம். இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது சொந்த ஊரில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளார். இவரது மனைவி ஜெனிபர் (27) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தற்போது இவர் கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழியில் நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஜெனிபர் தற்கொலை காரணம் என்ன?. என்று குறித்து நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி என்று விசாரணை நடத்தி வருகிறார்.