ஆசனூர் அருகே சிறுத்தை நடமாட்டம் பீதியில் வாகன ஓட்டிகள்

ஆசனூர் அருகே சிறுத்தை நடமாட்டம் பீதியில் வாகன ஓட்டிகள்;

Update: 2025-03-19 07:23 GMT
ஆசனூர் அருகே சிறுத்தை நடமாட்டம் பீதியில் வாகன ஓட்டிகள்
  • whatsapp icon
ஆசனூர் அருகே சிறுத்தை நடமாட்டம் பீதியில் வாகன ஓட்டிகள் சத்தி - மைஞர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதைக் கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர் சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் குடிநீர் தேவைக்காக அவ்வப்போது தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சத்தி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் செக் போஸ்ட் அருகே சாலையோர வனப்பகுதியில் சிறுத்தை நடமாடுவதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். வாகன ஓட்டிகள் அதனை தங்களது மொபைல் போணில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மொபைல் போன் வெளிச்சத்தை கண்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தகவலறிந்து வந்த ஆசனூர் வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்கி போட்டோ வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

Similar News