தடுப்புச்சுவர் இல்லாத நல்லுார் சிறுபாலம்
சிறுபாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்;

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில் இருந்து, வையாவூர் ஊராட்சி, நல்லுார் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் குறுக்கே மழைநீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. அரைகுறையாக அமைக்கப்பட்டுள்ள பில்லர்களும் உடைந்த நிலையில் உள்ளது. மின்விளக்கு வசதி இல்லாத இப்பகுதியில், இரவு நேரத்தில் இப்பாலம் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலை தடுமாறி சிறுபாலத்தின் பக்கவாட்டு பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சிறுபாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.