சக்திவேல் முருகப்பெருமான் ஆலயத்தில் சிறப்பு பூஜை!
மயிலாடும்மலை சக்திவேல் முருகப்பெருமான் ஆலயத்தில் இன்று சித்திரை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா மேல்மாயில் கிராமத்தில் மயிலாடும்மலை சக்திவேல் முருகப்பெருமான் ஆலயத்தில் இன்று சித்திரை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.