ராணிப்பேட்டை மாவட்டம் சிறுணமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட சம்பத்ராயன்பேட்டை கிராமத்தில் உள்ள மறைவான பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. வட்ட வழங்கல் அலுவலர் வினோத் விசாரணை நடத்தியதில், வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தார். அரிசி மூட்டைகள் நுகர் பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.