சோளிங்கர் ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு
ஏரியில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு;
சோளிங்கர் அடுத்த ஜம்பு குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவின் மகன் நிரஞ்சன். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நிரஞ்சன் மற்றும் சிறுவர்கள் ஜம்புகுளம் ஏரியில் குளிக்க சென்று உள்ளனர். அப்போது மாணவர் நிரஞ்சன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.