சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது75). இவர் கடந்த 12-ந் தேதி இரவு வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மெழுகுவர்த்தியை பற்ற வைத்துவிட்டு படுத்து தூங்கினார். அப்போது முதியவரின் வேட்டியில் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி வலியால் அலறி துடித்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.