கடலூர்: உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த துணை மேயர்
கடலூர் பகுதியில் துணை மேயர் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.;
கடலூர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு சமைத்த உணவுகளை சாப்பிட்டு பார்த்தார். அங்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்த பொதுமக்களிடம் சாப்பாடு தரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது உடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அம்மா உணவக தொழிலாளர்கள் உள்ளனர்.