அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சரவணன், 37; இவரது வீட்டில் கடந்த 2ம் தேதி, 10 சவரன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போனது. அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப் இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதே ஊரை சேர்ந்த காமராஜ், 51; அவரது மனைவி ராஜேஸ்வரி, 48; ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இருவரும் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் திருவெண்ணைநல்லுாரில் இரு இடங்களில் வீடு புகுந்து நகைகளை திருடியதும் கண்டறியப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 17 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.