சங்கரன்கோவிலில் அடையாளம் தெரியாத வாகன மோதி மூதாட்டி பலி

அடையாளம் தெரியாத வாகன மோதி மூதாட்டி பலி;

Update: 2025-07-06 07:19 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த குருநாதன் மனைவி கணபதியம்மாள்(52) என்ற மூதாட்டி இன்று காலையில் திருநெல்வேலி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று மூதாட்டி உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News