சங்கரன்கோவிலில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை;

Update: 2025-07-07 01:39 GMT
தமிழகம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் சார்பில் உறுப்பினர் சேர்க்கையில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக கழகத் தலைவர் மு க ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சியின் முன்னெடுப்பாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணிகண்டன் ஏற்பாட்டில் 16 வது வார்டு கழகத்தில் வீடு வீடாகச் சென்று சுப நிகழ்ச்சிகளுக்கு தாம்பூலம் கொடுத்து அழைப்பது போல் வெத்தலை பாக்கு தாம்பூலத்துடன் சென்று கழகத்தில் இணைவதற்காக அழைத்தனர்..இதில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா நகரக் கழகச் செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார் உடன் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கேபிள் கணேசன் மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தென்காசி வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியினரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்துள்ளது...

Similar News