கல்லூரி மாணவரின் பைக் திருட்டு

மணவாளக்குறிச்சி;

Update: 2025-07-11 08:35 GMT
மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் வினோத் (23). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3 ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வினோத் பைக்கில் அம்மாண்டிவிளையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்றார். மண்டபத்தின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றவர் பின்னர் திரும்பி வந்தபோது பைக்கை காணவில்லை. திருமண கூட்டத்தில் நின்றவர்கள் யாரோ பைக்கை திருடி சென்றது தெரிய வந்தது. மணவாளக்குறிச்சி  போலீசார் வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவரின் பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News