குமரி மாவட்டம் இரணியல் அருகே ஆளூர் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணிய பிள்ளை (65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிள்ளைகள் சென்னையில் உள்ளதால், தனிமையில் வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவம் சென்று பார்த்த போது அங்கு அவர் உடல் அழுகிய நிலையில் சடலமாக காணப்பட்டார். போலீசார் உடலை மீட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.