கோவை: நேர்த்திக்கடன் செலுத்த வளர்த்த ஆடு திருட்டு !
நேர்த்திக்கடனுக்காக வளர்த்த ஆடு மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
அன்னூர் அருகே காட்டம்பட்டி ராகுல் கார்டன் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வளர்த்து வந்த ஆடு ஒன்று திருட்டுபோனது. வீட்டின் முன் மேய்ந்து கொண்டிருந்த அந்த ஆடு, எடை 20 கிலோவிற்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. காணாமல் போனதைத் தொடர்ந்து, அன்னூர் போலீசில் சந்தோஷ் புகார் அளித்தார். போலீசார் இன்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.