கார் எரிக்கப்பட்ட விவகாரம். போலீசார் மவுனம்.

மதுரை உசிலம்பட்டி அருகே கார் எரிக்கப்பட்டு 25 நாட்களுக்கு பிறகும் போலீசார் விசாரணை நடத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது;

Update: 2025-08-10 15:27 GMT
மதுரை எழுமலை அருகே பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜா என்பவர் பேரையூர் மற்றும் திருமங்கலத்தில் ஆட்டோ கண்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர் பாஜக கட்சியில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 13.07.2025 அன்று தனது வீட்டில் இரவில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது., இதையறிந்து திடுக்கிட்டு எழுந்த வீட்டின் பணியாளர்கள் வெளியே சென்று பார்த்த போது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது கார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. சிசிடிவி கேமாராவை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள் காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியது தெரிந்தது. இது குறித்து தர்மராஜாவின் மகன் யோகபிரபு டி.இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 25 நாட்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என்பதால் மனு நடவடிக்கை குறித்து விசாரிக்க உசிலம்பட்டி மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் டிஎஸ்பி அலுவவவலகத்தில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

Similar News