திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் இன்று (ஆகஸ்ட் 19) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.