புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தை சேர்ந்தவர் பாண்டிதுரை (22). மது போதையில் இருந்த இவர் நேற்று திருக்கோகர்ணத்தில் உள்ள அவரது வீட்டின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த நிலையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.