கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் குரும்பட்டி அருகேயுள்ள கே.மோட்டூரை சேர்ந்தவர் உபேந்திரன் (19). இவர் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய காதலை அந்த பெண் ஏற்கததால் மனமுடைந்த உபேந்திரன் சோக்காடி கிராமத்தை அருகே வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.