சங்கரனாம்பட்டியில் நின்றிருந்த மூதாட்டி மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.
சங்கரனாம்பட்டியில் நின்றிருந்த மூதாட்டி மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.;
சங்கரனாம்பட்டியில் நின்றிருந்த மூதாட்டி மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சங்கரனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி சின்னம்மாள் வயது 78. இவர் செவ்வாய்க்கிழமை அன்று இரவு 8 மணி அளவில் அவரது மகள் பொன்னுத்தாயி வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கிறார். அப்போது அருகில் உள்ள நெல்லிக் கோம்பை பகுதியைச் சேர்ந்த சூர்யா வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர் நின்று கொண்டிருந்த சின்னம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து பொன்னுத்தாயி அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய சூர்யா மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.