மருத்துவ முகாமை துவக்கி வைத்த நந்தகுமார்!
பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று (செப். 20) நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பொய்கை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று (செப். 20) நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் MLA ஏ.பி. நந்தகுமார் ஆகியோர் தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். இதில், ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சித்ரா குமாரபாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.