ஜல்லிக்கட்டு விழாவிற்கு கால்கோள் விழா
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு விழாவிற்கு கால்கோள் விழா நடைபெற்றது.;
குமாரபாளையம் ஜல்லிக்கட்டு விழா 10ம் ஆண்டாக ஜன, 25ல், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி பின்புறம் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு பேரிகார்டு மற்றும் கேலரி பணிகளுக்கான முகூர்த்தகால் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மூர்த்தி, ஈரோடு எம்.பி. பிரகாஷ், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெப்படை செல்வராஜ், குமாரபாளையம் நகர பொறுப்பாளர்கள் ஞானசேகரன், குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ், பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளர்கள் நாச்சிமுத்து, இளங்கோவன், எஸ்.எஸ்.எம். மதிவாணன், தி.மு.க. முன்னாள் நகர செயலர் செல்வம் உள்பட திமுக நிர்வாகிகள் , ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.