பரமத்தி அருகே பட்ட பகலில் வீடு புகுந்து 10 பவுன் நகை ரூ.40 ஆயிரம் திருட்டு.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள நட்டமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி வீட்டில் மர்ம நபர்கள் பட்டப்பகலில் வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்த பத்து பவுன் தங்க நகை மற்றும் ரூ.40000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றர்

Update: 2024-10-18 15:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்திவேலூர்.அக்.18: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி (55) விவசாயி. இவரது மனைவி சரசு. நேற்று காலை சரசு அரசின் 100 நாள் வேலைக்கு சென்று இருந்த நிலையில் பாலுசாமி காலை 10 மணிக்கு சொந்த வேலை காரணமாக கரூர் சென்றுள்ளார். பின்னர் பகல் சுமார் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பணம் நகை திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் தகவல் தெரிவித்ததை அடுத்து பரமத்தி காவல் ஆய்வாளர் இந்திராணி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தோடு, மோதிரம் தங்க காசு உள்ளிட்ட 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ .40 ஆயிரம் ரொக்க பணமும் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News