சத்தியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

சத்தியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Update: 2024-10-18 05:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சத்தியமங்கலத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் மோட்டார்சைக்கிளில் சோதனை செய்த போது பெட்ரோல் டேங்க் கவரில் 100 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து இரண்டு வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பர்கூரை சேர்ந்த முருகேஷ் வயது 21 கடம்பூரை சேர்ந்த விக்னேஷ் (18) ஆகியோர் என்பதும். அவர்கள் கஞ்சா பொட்டலத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முருகேஷ், விக்னேஷ் இருவரையும் சத்தியமங்கலம் போலீசார் கைது. செய்ததுடன் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Similar News