நாளை குரூப் 2 தேர்வு புதுகையில் 15, 388 பேர் எழுதுகின்றனர்!

அரசு செய்திகள்

Update: 2024-09-13 03:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டையில் சனிக்கிழமை (செப். 14) நடைபெறவுள்ள குரூப்-2 தேர்வை 55 மையங்களில் 15,388 பேர் எழுதுகின்றனர். புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி வட்டங்களில் இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக 55 முதன்மைத் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களும், 2 மாவட்ட துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பாளர்களும், 3 பறக்கும் படைகளும், வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துச் செல்வதற்காக 13 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும் என்றும். 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். தேர்வுக் கூடங்களில் குடிநீர், கழிப்பறை, மின் வசதி, பேருந்து வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன், வருவாய்க் கோட்டாட்சியர்கள் பா. ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமார் (அறந்தாங்கி), தெய்வநாயகி (இலுப்பூர்) உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Similar News