இருசக்கர மோட்டார் மெக்கானிக் தொழிலாளர் சிங்கத்தின் 20ம் ஆண்டு விழா

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

Update: 2024-07-28 11:27 GMT
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு வர்த்தக கூட்டமைப்பு அரங்கில் தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதுரை நியூஸ் இருசக்கர மோட்டார் மெக்கானிக் தொழிலாளர் சிங்கத்தின் 20ம் ஆண்டு விழா சங்கத்தின் மாநில தலைவர் ஜானகிராமன் அவர்கள் தலைமையிலும், மதுரை மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, செயலாளர் ரமேஷ் குமார், பொருளாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு நலிந்தோர்க்கு நல உதவி திட்டங்கள், பள்ளி குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை, சங்கத்தின் மூத்த நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினார், மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள் கூட்ட அரங்கை திறந்து வைத்தார், மற்றும் மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் நாகராஜன், தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா மற்றும் சங்கத்தின் மாநில ஆலோசகர் ஷாஜகான், மாவட்ட ஆலோசகர் கலீல் ரகுமான், மாநில துணைச் செயலாளர் வடிவேல், ராமலிங்கம், இணைச்செயலாளர் இளங்கோ மற்றும் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர், மேலும் இந்நிகழ்வில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

Similar News