அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கை வரும் அக்.23ஆம் தேதிக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Update: 2024-09-28 14:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, தூத்துக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் தவிர யாரும் ஆஜராகவில்லை. அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்த முன்னாள் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் அமைச்சர் தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சார்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டார்.

Similar News