தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து வணிக நிறுவனங்களும் 24 மணி நேரமும் செயல்படலாம்! -வணிகர் சங்கம் அறிவிப்பு.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அக்டோபர் 26ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் செயல்படலாம்.

Update: 2024-10-26 10:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு கடைகள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் அக்டோபர் 26 முதல் 30ம் தேதி வரை இரவு 1 மணி வரை செயல்படவும், பேருந்து நிலைய கடைகள் 24 மணி நேரமும் செயல்படவும் அனுமதி வழங்க வேண்டி (அக்டோபர் -25) வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து வணிகர் சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.... தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வணிகர்கள் தொழில் செய்ய ஏதுவாக வருகிற அக்டோபர் 26ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News