மாநில அளவிலான 8 ஆம் ஆண்டு தொடர் கபடி போட்டி

முதல் பரிசை வென்ற பிச்சம்பட்டி கபடி அணி

Update: 2024-10-26 14:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தரகம்பட்டி அருகே காளையபட்டியில் பிகேஎம் ஸ்போர்ட்ஸ் கிளப், அமெச்சூர் கபாடி கழகம், திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் சார்பாக மாநில அளவிலான 8ஆம் ஆண்டு தொடர் கபாடி போட்டி நடந்தது. காளையபட்டி விளையாட்டு திடலில் 70 கிலோ எடைபிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களை கொண்டு 2 நாள் நடந்த கபாடி போட்டிக்கு கடவூர் ஒன்றிய குழு தலைவர் மற்றும் கடவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். காளையபட்டி முத்துச்சாமி, ஊர்கவுண்டர் கதிரவன், ஊர் நாட்டாமை காளிதாஸ் மற்றும் விழா கமிட்டியாளர்கள் இளைஞர் அமைப்பினர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 2 நாட்களாக நடைபெற்ற போட்டியில் கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி பிவிகே ஸ்போர்ட்ஸ் கிளப் கபாடிக் குழு அணியினர் முதல் பரிசாக ரூ.30 ஆயிரத்து 10 ரொக்கப்பணம் மற்றும் 5 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை தட்டிச்சென்றது. வடவம்பாடி எம்பிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கபாடி குழுவிற்கு 2ஆம் பரிசாக ரூ.20 ஆயிரத்து 10 ரொக்கப்பணம் மற்றும் 4 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை பெற்றனர். இந்த கபாடி போட்டியில் காளையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியமேரி மரியலூயிஸ், துணை தலைவர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News