புரவிபாளையத்தில் சட்ட விரோத மது விற்பனை. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

புரவிபாளையத்தில் சட்ட விரோத மது விற்பனை. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல்.

Update: 2024-09-16 12:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புரவிபாளையத்தில் சட்ட விரோத மது விற்பனை. 26 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பது குறித்து, காவல் உதவி ஆய்வாளர் மகாமுனிக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 15ஆம் தேதி மதியம் 12:00 மணி அளவில், சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பிவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ,அருகில் உள்ள புரவிபாளையம் காலணியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட புரவிபாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் ரவி வயது 57 என்பவர் கைது செய்யப்பட்டு, அவர் விற்பனை செய்ய வைத்திருந்த 26 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Similar News