கந்தர்வகோட்டை அருகே வடுகபட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் (29). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த விஜயலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கடந்த 26 ஆம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவரது கணவர் ராமச்சந்திரன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.