பெட்ரோல் போடுவதில் தகராறு வீரணாம்பட்டில் சாலை மறியல்

மறியல்

Update: 2024-09-22 04:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் அருகே பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தராறில் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த குன்னத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 42; வீரணாம்பட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 41; இருவருக்குமிடையே பெட்ரோல் போடுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் திருக்கோவிலுார் - கடலுார் மெயின் ரோட்டில், பெட்ரோல் பங்க் எதிரே மதியம் 12:00 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கோவிலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, 12:30 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News