தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்

வைபவம்

Update: 2024-09-22 04:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, சுவாமிக்கு திருப்பாவாடை தளிகை சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜை, 6:45 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கண்ணாடி அறை மண்டபத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து, 8:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 11:00 மணிக்கு சிகப்பு கல்கி கிரீடம், மரகத கண்டி, மரகத பச்சை பதக்கம், அட்டிகை அணிந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க திருப்பாவாடை தளிகையுடன் தீபாராதனை நடந்தது. மூலவர் உலகளந்த பெருமாள் கல்பதித்த சங்கு சக்கரம், கர்ண பத்திரம், காசு மாலை, மாங்காய் மாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சுவாமி சன்னதி வீதி புறப்பாடு, ஊஞ்சல் சேவை நடந்தது.

Similar News