கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல் நகர் பகுதியில் கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது

Update: 2024-09-21 16:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையில் சார்பு ஆய்வாளர் ராமபாண்டியன் மற்றும் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது R.S.ரோடு, பேருந்து நிலையம் அருகே, ஸ்டாலின் காட்டேஜ் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த சிவக்குமார், ஆனந்த், குமார் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 45 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News