புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அருணா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 489 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கு மாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக் டர் உத்தரவிட்டார். ரெடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 30 பேருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன.