சிறுமியை 5 மாத கர்ப்பிணியாக்கி திருமணம் ஆசாமி கைது
மயிலாடுதுறை நகரில் 16 வயது சிறுமி 5 மாத கர்ப்பமாக்கி கோயிலில் தாலி கட்டி குடும்பம்நடத்திய நபரை போசோவில் கைதுசெய்த அனைத்து மகளிர் போலீசார்;
மயிலாடுதுறை பூக்கடை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(22). இவர் 16 வயது கொண்ட சி|றுமியை கடந்த ஓராண்டாக காதலிப்பதாகக்கூறி பழகிவந்துள்ளார். இதற்கிடையே அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாகியுள்ளார், உடனடியாக அவர் அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டு அந்த சிறுமியின் வீட்டிலேயே இருநதுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரை 1098 மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அலுவலர் ஆரோக்கியராஜ் விசாரணை செய்து இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் மணிகண்டனை அழைத்து விசாரித்து அவர்மீது போசோ மற்றும் குழந்தை திருமண தடைசட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவுசெய்து மண்கண்டனைகைதுசெய்து காவலில் அடைத்தனர்.