நூதன முறையில் ரூ.6.1/2 கோடி மோசடி
திண்டுக்கல்லில் நிலத்தை வாங்கிக் கொள்வதாக கூறி அச்சக உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.6.1/2 கோடி மோசடி - மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு;
திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த சரவணன்(42) அப்பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் வடமதுரை அருகே உள்ளது சரவணனுக்கு பணம் தேவைப்பட்டதால் அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். இவரிடம் திருச்சியில் மின்விளக்கு உதிரிபாக தொழிற்சாலை நடத்தும் வினோத்குமார்(40) என்பவர் அறிமுகமாகி நிலத்தை 6 கோடியே 58 லட்சத்திற்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்து நூதன முறையில் ஏமாற்றி நிலத்தின் அசல் ஆவணங்களை பெற்றுக்கொண்டு தற்போது பணத்தை கொடுத்து தான் ஆவணங்களை வாங்கியதாக வினோத்குமார் தெரிவித்ததை தொடர்ந்து சரவணன் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களிடம் அளித்ததின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.