கரூர் மாவட்டத்தில் 67.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 67.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் 67.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக முழுவதும் லேசானது முதல் கனமழை வரை பரவலாக பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தோகைமலையில் 40 மில்லி மீட்டர், க.பரமத்தியில் 3.20 மில்லி மீட்டர் மாயனூரில் 2.00 மில்லி மீட்டர் பஞ்சபட்டியில் 2.80 மில்லி மீட்டர் கடவூரில் 4.00 மில்லி மீட்டர் பாலவிடுதியில் 9.00 மில்லி மீட்டர் மைலம்பட்டியில் 6.00 மில்லி மீட்டர் என மொத்தம் 67.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 5.58 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.