தேனீக்கள் கொட்டி 8 பேர் காயம்

காயம்

Update: 2024-09-08 04:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரிஷிவந்தியம் அடுத்த சாத்தப்புத்துாரைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 55; இவருக்கு சொந்தமான விளைநிலம் பாவந்துார் பகுதியில் உள்ளது. அண்ணாமலையும், அவரது மகன் பாலகிருஷ்ணனும் நேற்று காலை 9:00 மணியளவில் விளைநிலத்தில் உள்ள பருத்திக்கு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து அதிலிருந்த தேனீக்கள் அண்ணாமலை, பாலகிருஷ்ணன் மற்றும் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சங்கர் மகள் சஹாரா, 5; மகன் பிரதீப், 3; அவ்வழியாக சென்ற பாவந்துார் ஆரியமாலா, 52; முள்அரும்பு, 60; துாரி, 60; ஜெயக்கொடி, 40; ஆகியோரை கொட்டியது. இதில் காயமடைந்த 8 பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தியாகதுருகம் ஒன்றிய சேர்மன் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி பெருமாள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நலன் குறித்து கேட்டறிந்து, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கினர். டாக்டர்கள் நேரு, பழமலை, சுரேஷ் உடனிருந்தனர்.

Similar News