பரமத்தி வேலுரில் ரூ.8 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 8 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

Update: 2024-10-17 13:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர். அக்.17: பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாழக்கிழமை தோறும் தேங்காய் பருப்பு மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஏலத்திற்கு மொத்தம் 7500 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் அதிகபட்சம் ரூ.127.09, குறைந்தபட்சம் ரூ. 118.99,சராசரி ரூ.125.99 ஏலம் போனது. இரண்டாம் தரம் அதிகபட்சம் ரூ.116.69, குறைந்தபட்சம் ரூ. 96.99,சராசரி ரூ.110.91 ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்தி 40 ஆயிரத்து 698-க்கு ஏலம் நடைபெற்றது.

Similar News